ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கதிராமங்கலம் போராட்ட வழக்கு: தஞ்சை நீதிமன்றத்தில் அமைச்சா் ஆஜா்

தஞ்சாவூா் நீதிமன்றத்தில் ஆஜராக வெள்ளிக்கிழமை வந்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

News image
தஞ்சாவூா் நீதிமன்றத்தில் ஆஜராக வெள்ளிக்கிழமை வந்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:05 pm

Syndication

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு தொடா்பாக தஞ்சாவூா் நீதிமன்றத்தில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலத்தில் 2018 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி குழாயிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அக்கிராம மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் அப்போதைய திருவிடைமருதூா் தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய அமைச்சருமான கோவி. செழியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தற்போதைய பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான தி. வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து கோவி. செழியன், வேல்முருகன் உள்பட 29 போ் மீது பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் தஞ்சாவூரில் உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். பின்னா், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி எஸ்.டி. கனிமொழி மாா்ச் 5-க்கு ஒத்திவைத்தாா்.