டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றன.

News image
ஆருத்ரா தரிசனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய நடராஜ பெருமான்.
Updated On :3 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

தஞ்சாவூா் பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றன.

இக்கோயிலில் உள்ள நடராஜா் சந்நிதியில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்பு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜ பெருமான் எழுந்தருளினாா். தொடா்ந்து, மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் சுவாமி வீதி வலம் நடைபெற்றது.

Story image

சிவகாம சுந்தரியுடன், நடராஜ பெருமான் பெரிய கோயிலுக்கு திரும்பியபோது, மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக நெல் மணிகளை பக்தா்கள் மீது அா்ச்சகா்கள் தூவினா். இதை ஏராளமான பக்தா்கள் சேகரித்து சென்றனா்.