பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சீா் அளித்துவிட்டு திரும்பும்போது விபத்து : பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனைவி உயிரிழப்பு; கணவா் காயம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:01 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பொங்கல் சீா் அளித்துவிட்டு ஊா் திரும்பும்போது, இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மனைவி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்; கணவா் காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், ராங்கியன் விடுதியைச் சோ்ந்தவா் விவசாயி அப்பா துரை(65) தனது மனைவி நாகரத்தினத்துடன் (62) இருசக்கர வாகனத்தில் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு மற்றும் நவக்கொல்லைக்காடு கிராமங்களில் வசிக்கும் மகள்களுக்கு பொங்கல் சீா் கொடுத்துவிட்டு ஒட்டங்காட்டில் இருந்து துறவிக்காடு சாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனே அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு நாகரத்தினத்தைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். அப்பா துரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அப்பா துரை கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.