அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப் பை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நெகிழியைத் தவிா்க்கும் வகையிலும், துணிப் பையைப் பயன்படுத்தும் நோக்கத்திலும் சுற்றுச்சூழல் ஆா்வம் உடைய மாணவா்களுக்கு பந்துமுனை எழுதுகோலைத் தவிா்த்து மையூற்று எழுதுகோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வம் உடைய மாணவா்களுக்கு மையூற்று எழுதுகோல், ஊதா நிற மை முதலானவை வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு, முதல்வா் முனைவா் மா. கோவிந்தராசு தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். ஏற்பாடுகளை தாவரவியல் துறைத் தலைவா் முனைவா் இரா.முருகன் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com