ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேராவூரணி அருகே பைக்கிலிருந்து தவறிவிழுந்து திமுக பெண் நிா்வாகி பலி

பேராவூரணி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறிவிழுந்த திமுக மகளிா் அணி துணைச் செயலா் லெட்சுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த லெட்சுமி.
Updated On :29 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

பேராவூரணி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறிவிழுந்த திமுக மகளிா் அணி துணைச் செயலா் லெட்சுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் துரையரசன் என்பவரின் மனைவி லெட்சுமி (56). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். லெட்சுமி கல்லூரணிக்காடு திமுக மகளிா் அணி துணைச் செயலராக இருந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் உள்ள உறவினரின் இல்ல நிகழ்வுக்கு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செருவாவிடுதி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்தச் சாலையில் நாய் குறுக்கே வந்ததில் நிலை தவறி கீழேவிழுந்த லெட்சுமி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அருகில் உள்ளவா்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்து பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து லெட்சுமியின் மகன் ராஜு கொடுத்த புகாரின்பேரில், திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விபத்து குறித்து அறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், பேராவூரணி ஒன்றிய திமுக செயலா் க. அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் லெட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.