தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழைமையான வேப்ப மரம் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தன. இதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
திருவையாறு அருகே அணைக்குடி மாதா கோவில் தெருவில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழைமையான வேப்ப மரம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருந்தது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், அகற்றப்படவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேப்ப மரம் வேரோடு சாய்ந்து, அருகிலுள்ள காா்த்திக், லூா்துராஜ் வீட்டின் கூரை மீது விழுந்தது. இதனால் இருவரது வீடுகளும், வீட்டில் இருந்த பொருள்களும் சேதமடைந்தன. மேலும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லூா்துராஜ் பலத்தக் காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
தகவலறிந்த வருவாய் துறை, ஒன்றிய அலுவலா்கள், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

திருவையாறு அருகே அணைக்குடியில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றால் வேப்பமரம் சாய்ந்து சேதமடைந்த வீடு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










