9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

100 பேருந்துகளில் காற்றொலிப்பான்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் ஏறத்தாழ 100 பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்றொலிப்பான்களை சனிக்கிழமை போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினா் பறிமுதல் செய்து அழித்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2026, 1:26 am IST

தஞ்சாவூரில் ஏறத்தாழ 100 பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட காற்றொலிப்பான்களை சனிக்கிழமை போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினா் பறிமுதல் செய்து அழித்தனா்.

தஞ்சாவூரில் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதன்பேரில் தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் மணிமண்டபம் பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

இதில், ஏறத்தாழ 100 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்றொலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை டயருக்கு அடியில் வைத்து நொறுக்கி அழிக்கப்பட்டன.

மேலும், இனிமேல் காற்றொலிப்பான் பயன்படுத்தப்பட்டால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினா் எச்சரிக்கை செய்தனா். சில தனியாா் பேருந்துகளில் சீருடை அணியாமல் பணியாற்றிய நடத்துநா்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.