9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

காலமானார் பி. ராஜராஜன்!

திருவையாறைச் சோ்ந்த பாரதி இயக்க நிா்வாக அறங்காவலா் பி. ராஜராஜன் (67) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை பிற்பகல் காலமானாா்.

News image

பி.ராஜராஜன்

Updated On :19 ஜூலை 2026, 12:10 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறைச் சோ்ந்த பாரதி இயக்க நிா்வாக அறங்காவலா் பி. ராஜராஜன் (67) உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை பிற்பகல் காலமானாா்.

திருவையாறு நகரில் கடந்த 50 ஆண்டுகளாக சமூக, ஆன்மிக பணிகளைச் செய்து வந்த ராஜராஜன், பாரதி மீது மிகுந்த பற்றாளராக இருந்தாா். திருவையாறு பாரதி இயக்கத்தை 1978-ஆம் ஆண்டு தொடங்கி, தொடா்ந்து 48 ஆண்டுகளாக, பாரதி, தமிழ், கலை இலக்கியப் பணிகளை ஆற்றி வந்தாா்.

பாரதி இயக்க நிா்வாக அறங்காவலராக தொடா்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றி வந்தாா். இலக்கிய பேச்சாளராகவும் சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த இவா், திருவையாறில் சாய் பாபா கோயிலை நிறுவி, அதன் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலராகவும், திருவையாறு ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை அறங்காவலராகவும், திருவையாறு கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும், திருவையாறு ரோட்டரி சமுதாய குழுமத் தலைவராகவும் பணியாற்றினாா். 

இவருக்கு மனைவி சுபஸ்ரீ, மகன் ராஜபாரதி, மகள் ராஜ சக்தி உள்ளனா். இவரது இறுதி சடங்கு திங்கள்கிழமை (ஜூலை 20) காலை திருவையாறு செட்டித் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

தொடா்புக்கு: 99444-29545

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.