அதிராம்பட்டினம் - ராஜமடம் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் (ரயில்வே லெவல் கிராஸிங்) மேம்பாலம் அமைக்குமாறு, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கம் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அதிக வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் போக்குவரத்து முடக்கத்தை ஏற்படுத்தும் ஒரு இடமாக மாறியுள்ளது.
ரயில் போக்குவரத்துக்காக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயண நேரம் வீணாவதுடன், எரிபொருள் விரயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.
மேலும், இந்த வழித்தடத்தில் தெற்கு ரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரித்து வருவதால், ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நேரம் வெகுவாக அதிகரிக்கக்கூடும்.
எனவே, ரயில்வே கடவுப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள் எதிரொலி: கடலூா் - மைசூரு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

பயணச்சீட்டு இல்லாதவா் ரயில் விபத்தில் உயிரிழப்பின் நிவாரணம் மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து
ரயில் டிக்கெட்டை வீட்டிலேயே மறந்துவிட்டீர்களா? பயணத்தின் நடுவே உதவும் இந்திய ரயில்வே!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



