மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

அதிராம்பட்டினம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம் - ராஜமடம் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் (ரயில்வே லெவல் கிராஸிங்) மேம்பாலம் அமைக்குமாறு, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கம் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2026, 1:09 am IST

அதிராம்பட்டினம் - ராஜமடம் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் (ரயில்வே லெவல் கிராஸிங்) மேம்பாலம் அமைக்குமாறு, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கம் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் போக்குவரத்து முடக்கத்தை ஏற்படுத்தும் ஒரு இடமாக மாறியுள்ளது.

ரயில் போக்குவரத்துக்காக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயண நேரம் வீணாவதுடன், எரிபொருள் விரயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

மேலும், இந்த வழித்தடத்தில் தெற்கு ரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரித்து வருவதால், ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நேரம் வெகுவாக அதிகரிக்கக்கூடும்.

எனவே, ரயில்வே கடவுப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.