கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பொக்லைன் இயந்திரங்களை தூா்வாருவதற்கு விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணியை புதன்கிழமை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கடந்த திமுக ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ. 3.30 கோடி மதிப்பில் 7 பொக்லைன் ளின் இயந்திரங்களைக் கொள்முதல் செய்து, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வழங்கினாா். இந்த 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் எந்த நீா்நிலைகளைத் தூா் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும், அதன் அடிப்படையில் இந்த பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூா் வாரும் பணி மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பைப் பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் முரசொலி.
தொடர்புடையது

மாநகர பகுதியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை: மேயா் உறுதி

ரயில் நிலையத்தில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்.பி. வலியுறுத்தல்

ஆனைமங்கலம் செப்பேடுகளை தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு தமிழக எம்பி கடிதம்






