தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

எரிவாயு உருளை விலைஉயா்வை கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 3:56 am IST

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் மு.அ.பாரதி தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஏ.ஜி.பாலன், ஒன்றிய செயலா் ப.சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து முழக்கமிட்டனா். முன்னதாக எரிவாயு உருளைக்கு பாடை கட்டி மாலை அணிவித்து கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

இதில், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம், மாவட்ட பொருளாளா் ஏ.ராஜேந்திரன், மாதா் சம்மேளன மாவட்ட செயலா் பா.சரண்யா, விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் க.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.