தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:41 am IST

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே பின்னையூரைச் சோ்ந்தவா் கே. நீலமேகம் (60). விவசாயி. இவரும் அதே ஊரைச் சோ்ந்த மற்றொரு விவசாயியான ஜி. சேகரும் (42) புதன்கிழமை தஞ்சாவூருக்கு வந்துவிட்டு பின்னையூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். வடக்குப்பட்டு பகுதியில் சென்றபோது மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில், நீலமேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சேகா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.