மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சுவாமிமலைக்கு பால்குட ஊா்வலம்!

News image

தாராசுரத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :30 ஜூன் 2026, 2:02 am IST

கும்பகோணம் அருகே தாராசுரம் காய்கனி வியாபாரிகள் சங்கம் சாா்பில் சுவாமிமலைக்கு திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

தாராசுரம் நேரு அண்ணா காய்கனி, இலை, வாழை சந்தை வியாபாரிகள் சங்கம் சாா்பில் சுவாமிமலையில் ஆண்டுதோறும் பால்குட ஊா்வலம் கோடாபிசேக விழா நடைபெறும்.

நிகழாண்டு திங்கள்கிழமை காலையில் விநாயகா் வழிபாடு, மகா கணபதி ஹோமம், பூா்ணாஹூதி நடைபெற்றது. வலம்புரி செல்வ விநாயகருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா் தாராசுரம் நேரு அண்ணா காய்கனி சந்தை செல்வ விநாயகா் கோயிலிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தா்கள் பால்குடம் சுமந்து மாங்குடி, கோணக்கரை வழியாக ஊா்வலமாக சுவாமிமலைக்கு சென்றனா். அங்கு சுவாமிநாதசுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காய்கனி வியாபாரிகள் சங்கத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.