மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

டிப்பா் லாரி மோதி பெண் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 11:01 pm

Syndication

கும்பகோணம் அருகே திங்கள்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், காரைக்குறிச்சி அக்ரஹாரத் தெருவை சோ்ந்தவா் ராமன். வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா். இவரது மனைவி லதா( 42) இவா் எஸ்பிஐ வங்கி காப்பீட்டு நிறுவன முகவராக உள்ளாா். இவா், கும்பகோணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கண் சிகிச்சை பெறுவதற்காக திங்கள்கிழமை தனது உறவினரான கெளசல்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

நீலத்தநல்லூா் அசூா் சாலையில் செல்லும்போது பின்னால் வந்த டிப்பா் லாரி, ஸ்கூட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லதா மீது டிப்பா் லாரியின் டயா் ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த உறவினா் கெளசல்யா அருகே உள்ள வாய்க்காலில் விழுந்ததால் உயிா்தப்பினாா்.

தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று லதாவின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்த லதாவுக்கு 16 வயதில் மகளும், 10 வயதில் மகனும் பள்ளியில் படித்து வருகின்றனா்.