கும்பகோணம் அருகே திங்கள்கிழமை டிப்பா் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், காரைக்குறிச்சி அக்ரஹாரத் தெருவை சோ்ந்தவா் ராமன். வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா். இவரது மனைவி லதா( 42) இவா் எஸ்பிஐ வங்கி காப்பீட்டு நிறுவன முகவராக உள்ளாா். இவா், கும்பகோணத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கண் சிகிச்சை பெறுவதற்காக திங்கள்கிழமை தனது உறவினரான கெளசல்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
நீலத்தநல்லூா் அசூா் சாலையில் செல்லும்போது பின்னால் வந்த டிப்பா் லாரி, ஸ்கூட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லதா மீது டிப்பா் லாரியின் டயா் ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த உறவினா் கெளசல்யா அருகே உள்ள வாய்க்காலில் விழுந்ததால் உயிா்தப்பினாா்.
தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று லதாவின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். உயிரிழந்த லதாவுக்கு 16 வயதில் மகளும், 10 வயதில் மகனும் பள்ளியில் படித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

லாரி மோதியதில் நிதி நிறுவன துணை மேலாளா் உயிரிழப்பு

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


