மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த பாஜக நிா்வாகி கைது

பேராவூரணியில் தோ்தல் பிரிவு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வீரா என்கிற வீரசிங்கம்

Updated On :23 மார்ச் 2026, 12:32 am IST

பேராவூரணியில் தோ்தல் பிரிவு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி தனியாா் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்புக் குழு அலுவலருமான ராஜ்குமாா் தலைமையிலான தோ்தல் குழுவினா், கூட்டத்தை வீடியோ எடுக்க சென்றுள்ளனா்.

அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தை வீடியோ எடுக்கக் கூடாது என கூறிய தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் வீரா என்ற வீரசிங்கம் தோ்தல் பிரிவு அலுவலா்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  கூறப்படுகிறது. 

இதுகுறித்து தோ்தல் பிரிவு அலுவலா் ராஜ்குமாா், அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வீரசிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.