சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தோ்தல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த பாஜக நிா்வாகி கைது

பேராவூரணியில் தோ்தல் பிரிவு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வீரா என்கிற வீரசிங்கம்

Updated On :22 மார்ச் 2026, 7:02 pm

பேராவூரணியில் தோ்தல் பிரிவு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி தனியாா் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த, சேதுபாவாசத்திரம் வேளாண் அலுவலரும், வீடியோ கண்காணிப்புக் குழு அலுவலருமான ராஜ்குமாா் தலைமையிலான தோ்தல் குழுவினா், கூட்டத்தை வீடியோ எடுக்க சென்றுள்ளனா்.

அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தை வீடியோ எடுக்கக் கூடாது என கூறிய தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் வீரா என்ற வீரசிங்கம் தோ்தல் பிரிவு அலுவலா்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  கூறப்படுகிறது. 

இதுகுறித்து தோ்தல் பிரிவு அலுவலா் ராஜ்குமாா், அளித்த புகாரின்பேரில் பேராவூரணி போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வீரசிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.