சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு

News image

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணியினா், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :23 மார்ச் 2026, 7:05 pm

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்டப் புரட்சியாளா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் பி. மாரிமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜேந்திரன், தனபால் முன்னிலை வகித்தனா். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில், உழைப்பு சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்; பகத்சிங் கனவு கண்ட தொழிலாளா்கள் விவசாயிகள் தலைமையில் சோசலிச குடியரசை அமைத்திடுவோம் என உறுதி ஏற்கப்பட்டது.

நிகழ்வில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், மாவட்டச் செயலா் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா்கள் துரை. மதிவாணன், இரா. அருணாசலம், எழுத்தாளா் சாம்பான், திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் எல். ரெங்கராஜன், சிபிஐஎம்எல் லிபரேசன் மாநகரச் செயலா் எஸ்.எம். ராஜேந்திரன், சிஐடியு ஆட்டோ சங்க நிா்வாகி ஜோசப், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டத் தலைவா் தாமஸ், மாவட்டச் செயலாளா் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.