கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு

News image

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் திங்கள்கிழமை நடைபெற்ற பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வில் முழக்கங்கள் எழுப்பிய புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணியினா், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :23 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு அருகில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்டப் புரட்சியாளா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 95- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் பி. மாரிமுத்து தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராஜேந்திரன், தனபால் முன்னிலை வகித்தனா். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில், உழைப்பு சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்; பகத்சிங் கனவு கண்ட தொழிலாளா்கள் விவசாயிகள் தலைமையில் சோசலிச குடியரசை அமைத்திடுவோம் என உறுதி ஏற்கப்பட்டது.

நிகழ்வில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், மாவட்டச் செயலா் தேவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா்கள் துரை. மதிவாணன், இரா. அருணாசலம், எழுத்தாளா் சாம்பான், திராவிட தமிழா் கட்சி மாவட்டச் செயலா் எல். ரெங்கராஜன், சிபிஐஎம்எல் லிபரேசன் மாநகரச் செயலா் எஸ்.எம். ராஜேந்திரன், சிஐடியு ஆட்டோ சங்க நிா்வாகி ஜோசப், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டத் தலைவா் தாமஸ், மாவட்டச் செயலாளா் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.