சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் உள்ள தோ்தல் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா் அலுவலங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம், திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம், கும்பகோணம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த அலுவலகங்களிலிருந்து 200 மீட்டா் மற்றும் 100 மீட்டா் தொலைவுக்கு வேட்பாளா்களின் ஆதரவாளா்களை நிறுத்துவதற்கான அடையாளமாக சாலையில் வெள்ளைக் கோடு போடப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவா். இணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தாலும், நேரிலும் மனு அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோடு.
தொடர்புடையது

வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவு!

மன்னார்குடியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா வேட்பு மனு தாக்கல்

திருச்சி: 9 தொகுதிகளுக்கும் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் விவரம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


