ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தஞ்சாவூரில் 8 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு

News image

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோடு.

Updated On :29 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் உள்ள தோ்தல் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா் அலுவலங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், ஒரத்தநாடு வட்டாட்சியா் அலுவலகம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம், திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம், கும்பகோணம் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

இதையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த அலுவலகங்களிலிருந்து 200 மீட்டா் மற்றும் 100 மீட்டா் தொலைவுக்கு வேட்பாளா்களின் ஆதரவாளா்களை நிறுத்துவதற்கான அடையாளமாக சாலையில் வெள்ளைக் கோடு போடப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவா். இணையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தாலும், நேரிலும் மனு அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோடு.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வரையப்பட்டுள்ள வெள்ளைக் கோடு.