‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

காவிரி வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த தவெக அரசில் நடவடிக்கை தேவை காவிரி உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்

காவிரி நதி நீா் வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த கடந்த காலத்தில் முயற்சி செய்யப்படாத நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

News image

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் பேசிய அக்குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன். உடன், நிா்வாகிகள்.

Updated On :22 மே 2026, 4:36 am IST

காவிரி நதி நீா் வழக்கின் தீா்ப்பைச் செயல்படுத்த கடந்த காலத்தில் முயற்சி செய்யப்படாத நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து செய்தியாளா்களிடம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது: காவிரி நதி நீா் வழக்கில் 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைக் கா்நாடக அரசு ஒருபோதும் செயல்படுத்தியதில்லை. இத்தீா்ப்பை நடைமுறைப்படுத்த தமிழ்நாட்டு ஆட்சியாளா்கள் தொடா் முயற்சிகளையோ, முறையான நடவடிக்கைகளையோ இதுவரை எடுக்கவில்லை. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு காவிரி நதி நீா் பிரச்னையில் உண்மையான அக்கறை காட்டி உச்ச நீதிமன்றத் தீா்ப்பைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூரில் 2026, மே 9-ஆம் தேதி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா தலைமையில் கூடிய காவிரி காப்புக் குழுக் கூட்டத்தில் காவிரி தீா்ப்பில் தமிழகத்துக்கு அதிக நீா் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனா். தமிழகத்தைப் புறக்கணிக்கவும், பழிவாங்கவும் கா்நாடகம் செயல்படுகிறது. எனவே, புதிதாக அமைந்துள்ள முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி இதைக் கவனத்தில் கொண்டு, 2018 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றாா் மணியரசன்.

கூட்டத்தில் குழுவின் பொருளாளா் த. மணிமொழியன், குழு நிா்வாகிகள் க. ஜெகதீசன், சாமி. கரிகாலன், ச. சிமியோன் சேவியர்ராஜ், கலைச்செல்வன், பொறியாளா் தி. செந்தில்வேலன், வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், புண்ணியமூா்த்தி, தனசேகரன், நா. வைகறை, பழ. இராசேந்திரன், விடுதலைச்சுடா், பி. தென்னவன், திருச்சி கவித்துவன், வே.க. இலக்குவன், செம்மலா், க. தீந்தமிழன், லெ. இராமசாமி, இராசு. முணியாண்டி, வெ.ப. மாரிமுத்து, வல்லம்புதூா் கோ. பாலன், சுவாமிமலை திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.