நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

"செறிவும், செழுமையும் நிறைந்தவை சங்க இலக்கியப் பாடல்கள்'

சங்க இலக்கியங்களில் செறிவும், செழுமையும் நிறைந்த பாடல்கள் நிறைய உள்ளன என்றார் முனைவர் கு. திருமாறன்.

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST

சங்க இலக்கியங்களில் செறிவும், செழுமையும் நிறைந்த பாடல்கள் நிறைய உள்ளன என்றார் முனைவர் கு. திருமாறன்.
திருச்சிராப்பள்ளி பாவாணர் தமிழியக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திங்கள் பொழிவு மற்றும்  வேங்கூர்ப் புலவர் க. முருகேசன் எழுதிய இரு நூல்கள் அறிமுக விழாவில், உதிரிப்பூக்கள் என்ற நூலை அறிமுகம் செய்து, அவர் மேலும் பேசியது:
சங்க இலக்கியங்களில் செறிவும், செழுமையும் நிறைந்த பாடல்கள் அதிகம் உள்ளன.  அதுபோல, பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் வேகமும், வீச்சும் கொண்ட சில பாடல்கள் உள்ளன.  சில பாடல்களில் செய்யுள் வளம்  குறைவாக இருந்தாலும்  உணர்ச்சியும், வீச்சும் குறையவில்லை. பலவகை பாக்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மரபுக்கவிதை குறித்து எடுத்துரைக்கப்பட்டாலும் புதுக்கவிதைகளும் இந்த நூலில் உள்ளன. இன்றைய காலத்துக்கேற்றதாக இந்த நூல் அமைந்திருக்கிறது என்றார் திருமாறன்.
தமிழே திராவிடம், திராவிடமே தமிழ் என்ற நூலை அறிமுகம் செய்து பேராசிரியர் இ. சூசை சிறப்புரையாற்றினார். பொறியாளர் வி. விடுதலை வேந்தன் வாழ்த்தினார். விழாவில், இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரம், திருக்குறள் சு. முருகானந்தம், கலியபெருமாள், பொறியாளர் சுப்பிரமணியன், பாவாணர் தமிழியக்கத்தின் தமிழகன், மருத்துவர் கோபால்,  சமூக சிந்தனை உயிர்ப்பியக்க அமைப்பாளர் ம. செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில்  கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.