திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களை வசூல் செய்வதற்கு தீவிர வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.
இது குறுத்தி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் கோட்ட அலுவலகங்களில், மார்ச் 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் தீவிர வரி வசூல் முகாமில் செலுத்தலாம்.
இதில் அனைத்து வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது வரி மற்றும் வரியில்லா இனம் தொடர்பான தொகையை செலுத்திக்கொள்ளலாம்.
இது தவிர https://tnurbanepay.tn.gov.in என்ற வலை தளத்தில் இணையதளம் மூலமும் வரியினங்களை செலுத்த முடியும்.
பொதுமக்கள் உரிய வரியினங்களை முறையாக செலுத்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.