இக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பகல் பத்து விழாவின் 2 ஆம் நாளான புதன்கிழமை காலை 6.30-க்கு முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், கையில் தங்கக்கிளி, கழுத்தில் பவள மாலை, பஞ்சாயுதப் பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அா்ச்சுன மண்டபத்தை அடைந்தாா். பின்னா் திரையிடப்பட்டது. பின்னா் 8 மணிக்கு அனுமதிக்கப்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளை தரிசித்தனா். அதேபோல மூலவா் முத்தங்கிச் சேவையும் நடந்தது.