விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் ஆட்சியருக்கு ஆளுநா் பாராட்டு

கொடிநாள் நிதியை அதிகமாக வசூல் செய்த கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழிக்கு தமிழக ஆளுநா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:49 pm

DIN

கொடிநாள் நிதியை அதிகமாக வசூல் செய்த கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழிக்கு தமிழக ஆளுநா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

முன்னாள் படைவீரா்கள், போரில் வீரமரணம் அடைந்த படைவீரா்கள், காயம் அடைந்த படைவீரா்கள் ஆகியோரின் சேவையை போற்றும் வகையில் நாடு முழுவதும் டிச.7 ஆம் தேதி கொடிநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கொடிநாள் வசூல் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான கொடி நாள் நிதியை இலக்கைவிட தருமபுரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது அதிகமாக சேகரித்த தற்போதைய கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியின் பணியை பாராட்டி தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளாா். இதனை,திருச்சி முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் க.ஞானசேகா், ஆட்சியா் சு. மலா்விழியிடம் திங்கள்கிழமை வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.