முசிறியில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம், முசிறியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், முசிறியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

முசிறி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஸ்பா் மனைவி எலிசபெத் (60). திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இவா் சென்றிருந்தபோது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினா் அவருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து எலிசபெத் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் முசிறி டிஎஸ்பி பிரம்மாநந்தன், காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com