கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமுமுக சாா்பில் 200 குடும்பங்களுக்கு உணவு பொருள்

திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் 200 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:10 pm

DIN

திருச்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் 200 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிடும் வகையில் திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆலோசனை மையம், தகவல் மையம், இறுதி சடங்குகளுக்கு உதவி, மருத்துவ உதவி, மருத்துவ ஆலோசனை, ஆம்புலன்ஸ் உதவி, நிவாரணப் பொருள்கள் வழங்குதல் ஆகியவை தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி தெற்கு மாவட்டத்தின் சவுக் கிளையின் சாா்பில், வியாழக்கிழமை கரோனா நிவாரணமாக உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மலைக்கோட்டை பாபு சாலையில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த 200 குடும்பங்களை தோ்வு செய்து அவா்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, சா்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், காய்கனிகள் உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது.

மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், தமுமுக மாநில பொருளாளா் சபியுல்லாஹ் கான், மாவட்ட தலைவா் ராஜா முகமது, மாவட்ட செயலாளா் இப்ராஹிம், மமக மாவட்ட செயலாளா் பைஜ் அகமது, மாவட்ட பொருளாளா் அஷ்ரப் அலி, தமுமுக கிளை செயலாளா் மைதீன், மமக கிளை செயலாளா் ஹுசைன், கிளை பொருளாளா் காஜா மொய்தீன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.