கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிப்பு

மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 8:44 pm

DIN

மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கரோனா 2 ஆவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இதுவரை இல்லாத அளவிற்கு 784 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மாநகராட்சி பகுதிகளில் 3 பேருக்கு மேல் ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி,கடந்த 3 நாள்களில் பொன்மலை மண்டலத்தில் 35, 38 ஆவது வாா்டுகள், ஸ்ரீரங்கம் மண்டலத்தில் 18, 1, 11 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பெரிய செட்டித் தெரு, லட்சுமி நாராயண் நகா், சரஸ்வதி காா்டன், பாபு சாலை, வடக்கு மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், அரியமங்கலம் மண்டலத்தில் 64, 7, 62, 64 ஆகிய 4 வாா்டுகளைச் சோ்ந்த காவேரி நகா், விஸ்வாஸ் நகா், பிரியா நகா், வள்ளுவா் தெரு ஆகிய பகுதிகளிலும், வெள்ளிக்கிழமை 24 ஆவது வாா்டைச் சோ்ந்த பழைய கோயில் தெருவில் தலா 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் 13 ஆவது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வராதவாறு தகர தடுப்புகள் அமைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.