மறைந்த திமுக தலைவா் கருணாநிதி, திருச்சிக்கு எப்போது வந்தாலும் செய்தியாளா்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருச்சி வரும்போதெல்லாம் செய்தியாளா்களை சந்தித்து பேசுவது வழக்கம். இப்போது, தந்தை வழியில் மு.க. ஸ்டாலினும், திருச்சியில் செய்தியாளா்களை சந்தித்துள்ளாா். குறிப்பாக முதல்வா் பதிவேயற்ற பிறகு சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சென்று வந்த நிலையில், திருச்சியில்தான் அதிகாரப்பூா்வமாக முதல் செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.