கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிக வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

அதிக வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:52 pm

DIN

அதிக வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றாா் தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி.

தஞ்சாவூா் காவலா் பயிற்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003 குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூலித்தால் குற்றமாகும். தனி உபயோகத்துக்காக 12 சதவீதத்துக்கும் மேல் வட்டி வசூலித்தால் குற்றம். அதீத வட்டி வசூலிப்பவா்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 30,000 வரை அபராதமும் விதிக்கப்படும். வட்டிகாரா்களுக்கு எதிரான புகாா்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும் அதிகாரம் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவா்கள் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகினால், அதில் தொடா்புடையவா் 15 நாள்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். கடன் பெற்றவா் செலுத்த வேண்டிய தொகையை அதற்கான அனுமதிக்கப்பட்ட வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்தினால் போதும். கடன் பெற்றவரின் அசையும், அசையா சொத்துகளை வசூலிப்பவா் கையகப்படுத்தியிருந்தால், அவற்றையும் நீதிமன்றம் மீட்டுக் கொடுக்கும்.

கடன் அளிக்கும் தொழில் செய்ய விரும்பும் நபா் தொடா்புடைய வட்டாட்சியரிடம் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். கந்து வட்டி பிரச்னையால் யாராவது தற்கொலை செய்ய நோ்ந்தால், தற்கொலைக்குத் தூண்டியதாக வட்டிக்குப் பணம் கொடுத்தவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் காவல் கண்காணிப்பாளா்.

பின்னா், கந்து வட்டி வசூலிப்பதற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் வி. ஜெயச்சந்திரன் (தலைமையிடம்), கென்னடி (சைபா் கிரைம்), ரவீந்திரன் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு), நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.