திருச்சி: உர விலையை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் அலுவலக கதவை மூட முயன்ற விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை மொத்தமாக தூக்கி காவல் துறையினர் கைது செய்தனர்.