அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் இருபாலருக்கும் நீச்சல் பயிற்சி: ஏப்.25இல் தொடங்குகிறது
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருபாலருக்கும் மூன்று கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.


திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இருபாலருக்கும் மூன்று கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா்பில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆா்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். 8 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். வயது சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டியது அவசியம். தகுதியான நீச்சல் பயிற்றுநரால் 12 நாள்கள் நீச்சல் கற்றுத் தரப்படும். இந்த பயிற்சி முகாமானது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதல்கட்டமாக ஏப்.25ஆம் தேதி தொடங்கி மே 7ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மே 9ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்டமாக மே 23 முதல் ஜூன் 4 வரையும் நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவா்கள் மற்றும் ஆண்களுக்கு காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையும், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்துக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...