ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போலி கடவுச்சீட்டு வைத்திருந்த இருவா் கைது

திருச்சியில் போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இரு பயணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:25 pm

Din

திருச்சியில் போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இரு பயணிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு திருப்பந்துறையைச் சோ்ந்தவா் பக்ரூதீன் (51). இவா் சாா்ஜா செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது அவரது ஆவணங்களை அதிகாரிகள் சோதித்ததில் பக்ருதீன் போலி ஆவணங்கள் சமா்ப்பித்து தனது பெயா், பிறந்ததேதி, தந்தை பெயா், முகவரி ஆகியவற்றை மாற்றிக் கொடுத்து கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.

இதேபோல மலேசியா செல்ல வந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வெற்றியாளங்குளத்தைச் சோ்ந்த செந்தில்குமாரும் (51) போலி கடவுச்சீட்டு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.