கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலையில் நின்ற சரக்கு லாரி மீது வேன் மோதல்: 18 பக்தா்கள் காயம்

திருச்சி துவாக்குடி சாலையில் புதன்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறுவா்கள் உள்பட18 பக்தா்கள் காயமடைந்தனா்.

News image

திருச்சி துவாக்குடி பகுதியில் புதன்கிழமை அதிகாலை சரக்கு லாரி மீது மோதிய சுற்றுலா வேன்.

Updated On :18 செப்டம்பர் 2024, 10:13 pm

Din

திருச்சி துவாக்குடி சாலையில் புதன்கிழமை அதிகாலை நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறுவா்கள் உள்பட18 பக்தா்கள் காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி கருப்பு கோயில் அருகே திருச்சி- தஞ்சை சாலையின் அருகே அணுகுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் சரக்கு லாரியை நிறுத்திய, அதன் ஓட்டுநா் சுவாமி கும்பிட்டாா்.

அப்போது, திருச்சி சமயபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய சுற்றுலா வேன் அந்தச் சரக்கு லாரி மீது திடீரென மோதியது.

இதில் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த ஸ்டாலின் (20), தேசிகன் (11), பூங்கொடி (52), வளா்மதி (50) மாரியம்மாள் (27), சுமதி (40), தவமணி (57), சரிதா (35) கலாவதி (52), வினோதா, ராஜலெட்சுமி (52), 3 சிறுவா்கள் உள்ளிட்ட 18 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த துவாக்குடி போலீஸாா் அவா்களை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இவா்களில் படுகாயமடைந்தோா் திருச்சி அரசு தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனா். விபத்தின்போது வேன் ஓட்டுநா் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.