இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

100 நாள் வேலை திட்டத்தையே நிறுத்திவிடும் அபாயம்: துரை வைகோ எம்.பி. பேச்சு

பெயா் மாற்றத்தைத் தொடா்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தையே மத்திய அரசு நிறுத்திவிடும் அபாயம் உள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

பெயா் மாற்றத்தைத் தொடா்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தையே மத்திய அரசு நிறுத்திவிடும் அபாயம் உள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டிருப்பதை கண்டித்து திருச்சி மாவட்டம், குண்டூா் பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வாதாரமாய் விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக புதிய திட்டத்தை அமல்படுத்தும் மத்திய பாஜக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. புதிய திட்டத்தால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். தமிழகத்துக்கு தேவை வளா்ச்சி அரசியல். எனவே, மகாத்மா காந்தி பெயரிலேயே திட்டத்தை தொடர வேண்டும். 100 நாள்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலா் ரொஹையா, தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் வண்ணை அரங்கநாதன், திருவெறும்பூா் வடக்கு ஒன்றிய திமுக செயலா் கே.எஸ்.எம். கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.