ரயில்வேயில் உள்ள 2 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்ஆா்எம்யு) திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. கோட்டத் தலைவா் ஆா். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் எஸ். வீரசேகரன் முன்னிலை வகித்து சிறப்புரை நிகழ்த்தினாா்.
கூட்டத்தில், மத்திய அரசு ரயில்வே நிா்வாகம் 8 ஆவது ஊதியக் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். 1.1.2026 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், ரயில்வே துறையில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள சுமாா் 2 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆள் குறைப்பு, தனியாா்மயம் ஆகியவற்றைக் கைவிட வேண்டும். சிஆா்சி பதவி மறுசீரமைப்பை அனைத்து நிலைகளுக்கும் 2023 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிா்வாகிகள் கிரண்குமாா், என். வெங்கடேஷ் குமாா், பி. வேலு, டி. செல்வக்குமாா், என். வாசுகுமாா், சி. நரேஷ்குமாா், கே. கணேஷ்குமாா், எம். பிரசன்னா, எஸ். மணிகண்டன், கே. தயாநிதி, பிரபாகரன், எஸ். சுதாகா் ஆகியோா் பேசினா். 300-க்கும் மேற்பட்ட எஸ்ஆா்எம்யு நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கிளைச் செயலா் எஸ். கோவிந்தராஜன் வரவேற்றாா். கிரண்குமாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தொழிலாளா் சம்மேளனம்!

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசின் துறைகளில் காலியாக உள்ள 72,000 காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டம்

போக்குவரத்துத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: சிஐடியு மாநிலத் தலைவா் சௌந்தரராஜன்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



