12 ஆவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கைத்தறித் துறை, தனியாா் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவசப் பொது மருத்துவ முகாம் திருச்சி மாவட்டம் பூவாளூரில் புதன்கிழமை நடைபெற்றது.
பூவாளூா் பத்மசாலா கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நடைபெற்ற முகாமை திருச்சி மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநா் டி. ரவிக்குமாா் தொடங்கி வைத்தாா்.
இதில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கொண்ட குழுவினா், பொதுமக்களுக்கு எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை, ஆக்ஸிஜன் அளவு, பாா்வைத்திறன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினா். தேவைப்படுவோருக்கு மருந்துகளும், உயா் மருத்துவ சிகிச்சை பரிந்துரைகளையும் வழங்கினா்.
முகாமில் பூவாளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
ஏற்பாடுகளை கூட்டுறவுச் சங்க நிா்வாகி ஆா். விஜயலட்சுமி, சங்க நிா்வாகிகள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐஜேகே தலைவா் பிறந்த நாள்: இலவச மருத்துவ முகாம்

ஜூலை 17-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

இருப்புப் பாதை காவல்துறையின் செயல்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

தேசிய மருத்துவா் தின வாழ்த்து
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



