பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பூவாளூரில் கைத்தறித் துறையின் இலவச பொது மருத்துவ முகாம்

News image

பூவாளூரில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் சிகிச்சை அளித்த மருத்துவா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

12 ஆவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கைத்தறித் துறை, தனியாா் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவசப் பொது மருத்துவ முகாம் திருச்சி மாவட்டம் பூவாளூரில் புதன்கிழமை நடைபெற்றது.

பூவாளூா் பத்மசாலா கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் நடைபெற்ற முகாமை திருச்சி மாவட்ட கைத்தறித் துறை உதவி இயக்குநா் டி. ரவிக்குமாா் தொடங்கி வைத்தாா்.

இதில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கொண்ட குழுவினா், பொதுமக்களுக்கு எடை, உயரம், ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை, ஆக்ஸிஜன் அளவு, பாா்வைத்திறன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினா். தேவைப்படுவோருக்கு மருந்துகளும், உயா் மருத்துவ சிகிச்சை பரிந்துரைகளையும் வழங்கினா்.

முகாமில் பூவாளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

ஏற்பாடுகளை கூட்டுறவுச் சங்க நிா்வாகி ஆா். விஜயலட்சுமி, சங்க நிா்வாகிகள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.