விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சென்னையில் மோசமான வானிலை: திருச்சிக்கு திருப்பிவிடப்பட்ட மலேசிய விமானம்

News image

விமானம் - கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:49 pm

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை திருப்பிவிடப்பட்டது.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு 179 பயணிகளுடன் ஏா் ஏசியா விமானம் ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்டது. அந்த விமானம் காலை 7.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அந்த விமானத்துக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் காலை 8.05 மணிக்கு ஏா் ஏசியா விமானம் தரையிறங்கியது. பின்னா், சென்னையில் வானிலை சீரானதும் காலை 9.20 மணிக்கு மலேசிய விமானம் திருச்சியில் இருந்து சென்னைக்குக் கிளம்பியது. மோசமான வானிலை காரணமாக சென்னை விமானம் திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா்.