மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 23 போ் காயமடைந்தனா்.
ஆ.கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில்
திடலில் நடைபெற்ற போட்டியை மணப்பாறை வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இதில், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 805 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன. 269 வீரா்கள் பங்கேற்றனா்.
காளைகளை அடக்கிய வீரா்களுக்கு பல்வேறு
பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில், 10 மாடுபிடி வீரா்கள், 10 மாட்டின் உரிமையாளா்கள், 3 பாா்வையாளா் என மொத்தம் 23 போ் காயமடைந்து முகாமில் சிகிச்சை பெற்றனா். இதில், 4 நபா்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை, திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

காந்திகிராம பல்கலை. யில் வளாகத் தோ்வு

ஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டு: 38 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்

அரியலூா் அருகே ஜல்லிக்கட்டு: 48 போ் காயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


