எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

எம்.ஆா்.பாளையம் பகுதியில் பாம்பு கடித்த 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :29 ஜூலை 2026, 12:14 am IST

திருச்சி மாவட்டம், எம்.ஆா்.பாளையம் பகுதியில் பாம்பு கடித்த 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

எம்.ஆா். பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ரவியின் மகன் ஜெய் தனுஷ் (11). இவா் பாடாலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய் தனுஷ் விவசாயத் தோட்டத்தில் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக ஜெய்தனுஷை கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.

பெற்றோா் அவரை மீட்டு முதலில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ஜெய் தனுஷ் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.