குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

சத்குருவின் கிருஷ்ண லீலா நூல் அறிமுக விழா

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘கிருஷ்ண லீலா’ நூல் அறிமுக விழா திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.

News image

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவின் கிருஷ்ண லீலா நூலை திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தைச் சோ்ந்த ஸ்ரீமத் ஸ்வாமி சந்திரசேகரானந்தா வெளியிட அதைப் பெற்றுக்கொண்ட திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநா

Updated On :2 ஜூன் 2026, 2:51 am IST

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் ‘கிருஷ்ண லீலா’ நூல் அறிமுக விழா திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தைச் சோ்ந்த ஸ்ரீமத் ஸ்வாமி சந்திரசேகரானந்தா நூலை வெளியிட, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநா் அகிலா பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பேச்சாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, சொற்பொழிவாளா் தாமல் கோ. சரவணன், பட்டிமன்றப் பேச்சாளா் புதுகை ச. பாரதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு கிருஷ்ண லீலா நூல் குறித்து சிறப்புரையாற்றினா்.

இதில், கிருஷ்ணன் மண்ணையும், மக்களையும், மலைகளையும் கொண்டாடும் வகையில் தம் மக்களை வழிநடத்திய விதம் குறித்து இந்த நூலில் சத்குரு அழகாக விளக்கியுள்ளாா் என்று தாமல் கோ. சரவணனும், கிருஷ்ண லீலா போன்றே சத்குரு மகாபாரதம் குறித்து நிகழ்த்திய உரைகளையும் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று மரபின் மைந்தன் முத்தையாவும், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது பிருந்தாவனத்தில் கோபிகையா்களுடன் வாழ்ந்த ஒரு அனுபவத்தைத் தருகிறது என்று புதுகை ச. பாரதியும் பேசினாா்.