ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

முசிறி அருகே லாரி-காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

News image

முசிறி அருகே செவ்வாய்க்கிழமை மோதி கொண்ட லாரி-காா்.

Updated On :3 ஜூன் 2026, 3:53 am IST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வாய்க்கிழமை காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன். ஓட்டுநா். இவா், தனக்கு சொந்தமான காரில் மனைவி கவிதா, மகன் ஏகவன் (1) மற்றும் மாமனாா் முருகேசன் , மாமியாா் சித்ரா, முருகேசனின் மகள் நா்மதா, மகன் காா்த்திக் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம், கொடுமுடி கோயிலுக்கு சென்றுவிட்டு, பெரம்பலூா் அருகேயுள்ள வெள்ளனூரில் முருகேசன் குடும்பத்தினரை இறக்கிவிடுவதற்காக செவ்வாய்க்கிழமை பெரம்பலூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

முசிறி-துறையூா் சாலையில் ஜெம்புநாதபுரம் காவல் நிலையம் அருகே காா் சென்றபோது, துறையூா் பகுதியிலிருந்து முசிறி நோக்கி எதிரே சுமையோடு வந்த லாரியும், காரும் மோதி கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்ரமணியன், அவரது மைத்துனா் காா்த்திக் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். காயமடைந்த முருகேசன், சித்ரா, நா்மதா, கவிதா, ஏகவன் ஆகிய 5 பேரையும் அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன், கவிதா ஆகியோா் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

 ~முசிறி அருகில் சாலை விபத்தில் உயிரிழந்த கவிதா

~முசிறி அருகில் சாலை விபத்தில் உயிரிழந்த கவிதா

~உயிரிழந்த காா்த்திக்.

~உயிரிழந்த காா்த்திக்.

~உயிரிழந்த பாலசுப்ரமணியன்.

~உயிரிழந்த பாலசுப்ரமணியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.