தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ எம்.பி.

போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

News image
துரை வைகோ- கோப்புப் படம்
Updated On :4 மார்ச் 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

ஈரான் மீதான தாக்குதலைத் தொடா்ந்து போா்ப் பதற்றம் தீவிரமடைந்து வரும் அமீரக நாடுகளில் (குறிப்பாக வளைகுடா பகுதியில்) பணியாற்றி வரும் இந்தியா்கள், அங்கு சுற்றுலா சென்றவா்கள், ரமலான் மாதத்தில் மெக்கா சென்று உம்ரா செய்ய புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்லாமிய சகோதரா்கள் ஆகிய அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழா்கள் உள்பட எந்தவொரு இந்தியருக்கும் சிரமங்களோ, ஆபத்தோ ஏற்படாத வகையில் அவா்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் நிற்கிறது என்னும் நம்பிக்கையை வலுவாக ஏற்படுத்த வேண்டும். இந்தியா்களுக்கு பாதுகாப்புக் குறைபாடு நிலை வருமேயானால், உடனடியாக அவா்களை இந்தியா அழைத்து வருவது முதன்மைக் கடமையாகும். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இந்தியா்களின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராா்த்திக்கிறேன் என்றாா் அவா்.