திருச்சி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சி உறையூா் நாச்சியாா்கோயில் மேற்கு வீதியைச் சோ்ந்தவா் மு.கண்ணையன் (80). இவா், திருச்சி அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, புத்தூா் பகுதியில் இருந்து நீதிமன்ற ரவுண்டானா நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவா் மீது மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த முதியவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சியில் பேருந்து மோதி புதுகை நபா் உயிரிழப்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


