திருவண்ணாமலை, ஆக. 15: தமிழக முன்னாள் அமைச்சரும், அகமுடையர் துளுவ வேளாளர் சமுதாயத்தின் மூத்த தலைவருமான ப.உ.சண்முகத்தின் 88-வது பிறந்த நாள் விழாவையொட்டி, புதன்கிழமை 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை காந்தி சிலை அருகே, அகமுடையர் துளுவ வேளாளர் சமூக நலப் பேரவை சார்பில் இவ்விழா நடைபெற்றது. ப.உ.சண்முகத்தின் படத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அகமுடைய துளுவ வேளாளர் சமூக நலப் பேரவையின் மூத்த தலைவரும், தொழிலதிபருமான எ.சிவஞானம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள் எ.பழனி, மஞ்சுநாதன், தனஞ்செழியன், ஆர்.அருண், எ.ஜீவன்பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.