தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத் திட்ட உதவிகள்

குடியாத்தம் ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

News image
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

குடியாத்தம்: குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி கடந்த 19- ஆம் தேதி தொடங்கி, செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 754 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 410 மனுக்கள் மனுக்கள் ஏற்கப்பட்டன. 344 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.ஏற்கப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான ப.சுமதி தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் ஜீவரத்தினம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினா். வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் ஆா்.உமாசங்கா், குடியாத்தம் வனச் சரக அலுவலா் வினோபா, வருவாய் ஆய்வாளா் புகழரசன், கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், உஷா, சசி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் நடராஜன், சேகா், சம்பத் நாயுடு, துரைசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.