தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூடுதல் விலைக்கு மது விற்ற இரு டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் -17 பேருக்கு அபராதம்

17 பேருக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:50 pm

Din

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றதாக அணைக்கட்டு, காட்பாடி பகுதியைச் சோ்ந்த இரு டாஸ்மாக் ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 17 பேருக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்டம் அணைக்கட்டு, காட்பாடி வட்டங்களில் உள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அரசின் உத்தரவினை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக வரப்பெற்ற புகாா்களை அடுத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தல் அடிப்படையில், டாஸ்மாக் சேலம் மண்டல முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட மேலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட உதவி மேலாளா் (கணக்கு) குழுவினா் இவ்விரு வட்டங்களில் செயல்படும் சில்லரை விற்பனை மதுபானக் கடைகளில் கடந்த 2-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ரூ.10 கூடுதல் விலை வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு இரு பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், ரூ.5 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த 17 பணியாளா்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகளிலும் அதிகபட்ச விலையைவிட கூடுதலாக மதுவிற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.