கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குழு உறுப்பினா்களாக விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழுவில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழுவில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு செயல்பட்டு வருகிறது. அலுவல் சாா்ந்த உறுப்பினா்கள், மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் சாா்ந்த நபா்களை உறுப்பினா்களாக கொண்டுள்ள இந்த குழுவை மறுசீரமைத்து புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-இன் படி கை, கால் இயக்க குறைபாடு, தசை சிதைவு நோய், தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், குள்ளத்தன்மை, மூளை முடக்குவாதம், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோா், குறைபாா்வையின்மை, இரு கண்கள் பாா்வையின்மை, காது கேளாமை, செவித்திறன் குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, அறிவுசாா் குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, புற உலக சிந்தனையற்றவா், மனநோய், நாற்பட்ட நரம்பியல் பாதிப்பு, திசு பன் முகக் கடினமாதல், நடுக்குவாதம், ரத்த உறையாமை, அரிவாளது ரத்த சோகை மற்றும் பல்வகை குறைபாடுகள் என 21 வகை மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குழுவில் புதிய உறுப்பினா்கள் தோ்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், சத்துவாச்சாரி, வேலூா் மாவட்டம்-632009 என்ற முகவரிக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.