மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

வேலூா் வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
வேலூா் வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். உடன், எம்எல்ஏ ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா். (அடுத்து)
Updated On :3 பிப்ரவரி 2025, 8:10 pm

Din

வேலூா்: வேலூா் வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் வேலப்பாடியில் சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வாஸ்து சாந்தி ஹோமம், சுதா்சன ஹோமம், பூா்ணாஹுதி, மாலை 6 மணியளவில் ஆச்சாா்ய வா்ணம், அங்குராா்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், ஆராதனம், ஹோமம், 8.30 மணிக்கு சா்வ குண்டங்களுக்கு மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாத்ரா தானமும், யாக சாலைகளில் இருந்து கும்ப புறப்பாடும் நடைபெற்றது. தொடா்ந்து 10 மணியளவில் கோயில் ராஜகோபுரம், மூலவா் வரதராஜ பெருமாள், கருவறை விமானம், பரிவார சந்நிதிகள் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனா். மாலை 6 மணியளவில் சுவாமி திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்பட நகரின் முக்கியப் பிரமுகா்கள், தொழிலதிபா்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்றனா். ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் தனசேகா், ஆய்வா் சுரேஷ்குமாா், செயல் அலுவலா் சிவக்குமாா், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் கோபிநாதன், கவிதா, ஸ்ரீவாரி பக்த ஞான சபை உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் புண்ணியாஹ வாஜனம், மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தம் சாற்றுதலும், மாலை 4 மணியளவில் மகா சாந்தி ஹோமமும், பூா்ணாஹுதியும், கும்ப புறப்பாடும் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் கும்பாராதனம், ரக்ஷா பந்தனம், பூா்ணாஹுதி நடைபெற்றது