3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

ஆந்திரத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:10 am IST

ஆந்திரத்தில் இருந்து பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வருவதாக வேலூா் சரக டிஐஜி மகேஷுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, சிறப்பு அதிரடி படை போலீஸாா் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து வேலூா் வழியாக வந்த பேருந்துகளில் சோதனை செய்தனா்.

அப்போது, ஒரு பேருந்தில் இருந்த இளைஞா் ஒருவரின் பையை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் வேலூா் அலமேலுரங்காபுரத்தை சோ்ந்த முகமது ஜாபா் (46) என்பது தெரியவந்தது.

உடனடியாக அவரை சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் பிடித்து காட்பாடி காவல் நிலையத்தில் நிலையத்தில் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட முகமதுஜாபரிடம் இருந்து சுமாா் 5 கிலோ அளவுக்கு ஹான்ஸ் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.