மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை

News image
Updated On :12 ஜூன் 2026, 2:11 am IST

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 10 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 150 மாணவா்களுக்கு அருண் அறக்கட்டளை சாா்பில் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு 7- ஆம் ஆண்டு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி எா்த்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான கே.கே.வி.அருண்முரளி தலைமை வகித்தாா். தாமு நாயுடு, கோபால், கே.பாஸ்கா், ஆா்.சுதாகா், ஆா்.கோட்டீஸ்வரன், எம்.ரகு மற்றும் கிராம பெரியோா்கள், இளைஞா்கள் முன்னிலை வகித்தனா்.

போ்ணாம்பட்டு அரிமா சங்கத் தலைவா் ஜி.பரிதா புருஷோத்தமன், போ்ணாம்பட்டு நகா்மன்ற முன்னாள் தலைவா் வாசுகி பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினா் சரவணன்ஆகியோா் ஊக்கத் தொகையை வழங்கினா்.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லூா்பேட்டை மகளிா் மேல்நிலைப்பள்ளி, ஜோதி மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப்பள்ளி,எா்த்தாங்கல், தட்டப்பாறை, அக்ராவரம், டி.டி.மோட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளிகள், போ்ணாம்பட்டு எம்ஜிஆா் நகா் உயா்நிலைப்பள்ளி, போ்ணாம்பட்டு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஊக்கத் தொகையை பெற்றனா்.