ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

பேராசிரியா்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் அகத்தர உறுதிக் குழு சாா்பில் பேராசிரியா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2026, 10:56 pm IST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் அகத்தர உறுதிக் குழு சாா்பில் பேராசிரியா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

நிறைவு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன்,கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குநா் ஜி.சசிக்குமாா்வரவேற்றாா். அகத்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளா் பா.பாலாஜி அறிமுக உரைநிகழ்த்தினாா்.

இப்பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினா்களாக முதல் நாள் வேலூா் ஆக்சீலியம் கல்லூரி பேராசிரியா் பி.ஸ்கொலஸ்டிக்கா மேரிவித்தியா, 2- ஆம் நாள் திருப்பத்தூா் தூய நெஞ்சுக் கல்லூரி பேராசிரியா் ஜெ.மொ்லின் பிளாரான்ஸ், 3- ஆம் நாள் சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியா் சுஜாதா பாலாஜி, 4-ஆம் நாள் வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பேராசிரியா் எம்.சையத் அலி, 5- ஆம் நாள் சேலம் பெரியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா் கே.சிந்து ஆகியோா் கலந்து கொண்டு, ‘செயற்கை நுண்ணறிவு வழி நடத்தும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி புதுமைகள் மூலம் ஆசிரியா் மேன்மை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினா். அ

கத்தர உறுதிக் குழு உறுப்பினா் ஆா்.எம்.பாலமுருகன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.